×

நிலத்தடி நீர் உயர்வு

தேவதானப்பட்டி, டிச. 18: தேவதானப்பட்டி அருகே, ஜெயமங்கலம் பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது. ஜெயமங்கலம் பகுதியில் உள்ள வராகநதி ஆற்றுப்பாசனம் மூலம் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், நல்லகருப்பன்பட்டி, சில்வார்பட்டி, உள்ளிட்ட இடங்களில் நேரடியாக இரண்டாயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இது தவிர கிணறுகள், போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்து 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வராகநதி பாசன கண்மாய்கள் நிரம்பியதாலும், ஆற்றில் லேசான நீர்வரத்து உள்ளதாலும் கிணற்று நீர் மற்றும் போர்வெல்களில் நிலத்தடிநீர் உயர்ந்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
× RELATED கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு